அருள்மிகு முல்லைவனநாதசுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614302, தஞ்சாவூர் .
Arulmigu Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur - 614302, Thanjavur District [TM014056]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு முல்லைவனநாத சுவாமி சிறப்பு
அருள்மிகு முல்லைவனநாதர் சுயம்பு லிங்கமாகும். லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. லிங்கத் திருமேனியில் முல்லைக் கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியான மூலவர் முல்லை வனநாதருக்கு புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால் தீராத நோய்களும், தீராத தோஷங்களும் குறிப்பாக சருமம் சம்பந்தமான நோய்கள், புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சிறப்பு
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார்.
நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற...அருள்மிகு முல்லைவனநாத சுவாமி சிறப்பு
அருள்மிகு முல்லைவனநாதர் சுயம்பு லிங்கமாகும். லிங்கம் புற்று மண்ணினால் ஆகியதாகும். எனவே சுவாமிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. லிங்கத் திருமேனியில் முல்லைக் கொடி படர்ந்திருந்தமைக்கான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியான மூலவர் முல்லை வனநாதருக்கு புனுகு சட்டம் சாத்தி வழிபட்டால் தீராத நோய்களும், தீராத தோஷங்களும் குறிப்பாக சருமம் சம்பந்தமான நோய்கள், புத்திர தோஷம் நிவர்த்தியாகும்.
அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சிறப்பு
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார்.
நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற முல்லை வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவன், இறைவியை வேண்டினால் குழந்தை பேறு கிடைக்குமென உபதேசித்தனர்.
நித்துருவரும், வேதிகையும் இறைவன், இறைவியை வணங்கினர். அதனால் மன மகிழ்ந்த மக்கட் பேறு உண்டாயிற்று.
வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் சுய நினை விழந்து மயக்கமுற்றிருந்த போது ஊர்த்துவபாத முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்க முற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு பிட்சையிட முடிய வில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது.
வேதிகை அம்பாளிடம் முறையிட அம்பாள் கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக்காப்பாற்றி நைந்துருவன் என்று குழந்தையாக கொடுத்தாள்.
இறைவியின் அருள் மகிமையை கண்டுணர்ந்த வேதிகை இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி உலகத்தில் கருத்தரித்த வர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள் பாலித்தாள். அதுமுதற் கொண்டு இத்தலத்திற்கு திருக்கருகாவூர் என்றும் பெயர் வழங்கி வரலாயிற்று.
குழந்தை நைந்துருவனுக்கு தாய்ப்பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால்குளம் தோன்றியது. அது திருக்கோயிலுக்கு முன்புறம் ஷீரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகிறது.
இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது. கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது.
வம்ச தோஷம் நீங்க நவகோடி நெய்தீப பிரார்த்தனை
இத்திருக்கோயிலில் விநாயக பெருமானுக்கு ஒரு தீபமும், அருள்மிகு முல்லைவனநாதசுவாமிக்கு ஒரு தீபமும், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை அம்மனுக்கு ஒன்பது தீபங்களும் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பாகும். இதன் பயனாக முன் வினைப்பயன் நீங்கப்பெற்று வேண்டுவது கிடைக்கப்பெறலாம்.
தல பெருமை
முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற முல்லை வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவன், இறைவியை வேண்டினால் குழந்தை பேறு கிடைக்குமென உபதேசித்தனர். நித்துருவரும், வேதிகையும் இறைவன், இறைவியை வணங்கினர். அதனால் மன மகிழ்ந்த மக்கட் பேறு உண்டாயிற்று.வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் சுய நினை விழந்து மயக்கமுற்றிருந்த போது ஊர்த்துவபாத முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்க முற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு...முன்காலத்தில் முல்லை வனம் என்ற இத்தலத்தில் கௌதமர், கார்க்கேயர் என்ற இரண்டு முனிவர்கள் தவம் செய்து வந்தனர். நித்துருவர் என்பவரும் தவம் செய்து வந்த முனிவர் களுக்கு பணிவிடை செய்து வந்தார். நித்துருவர் வேதிகை தம்பதியினர் தமக்கு குழந்தை இல்லையே என்ற குறையை முனிவர்களிடம் கூற முல்லை வனத்தில் எழுந்தருளி உள்ள இறைவன், இறைவியை வேண்டினால் குழந்தை பேறு கிடைக்குமென உபதேசித்தனர். நித்துருவரும், வேதிகையும் இறைவன், இறைவியை வணங்கினர். அதனால் மன மகிழ்ந்த மக்கட் பேறு உண்டாயிற்று.வேதிகை கருவுற்றிருந்தபோது கணவர் இல்லாமல் தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் சுய நினை விழந்து மயக்கமுற்றிருந்த போது ஊர்த்துவபாத முனிவர் வந்து பிட்சை கேட்க, மயக்க முற்றிருந்தபடியால் வேதிகையால் முனிவருக்கு பிட்சையிட முடிய வில்லை. அது அறியாத முனிவர் சாபமிட வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் முறையிட அம்பாள் கர்ப்பரட்சகியாக தோன்றி கலைந்த கருவை ஒரு குடத்துள் ஆவாகனம் செய்து குழந்தை உருவாகும் நாள் வரையிலும் வைத்துக்காப்பாற்றி நைந்துருவன் என்று குழந்தையாக கொடுத்தாள்.இறைவியின் அருள் மகிமையை கண்டுணர்ந்த வேதிகை இனி இத்தலத்தில் கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி உலகத்தில் கருத்தரித்த வர்களையும், கருவையும் காப்பாற்ற வேண்டுமென்று பிரார்த்திக்க அம்பாள் அவ்வாறே அருள் பாலித்தாள். அதுமுதற் கொண்டு இத்தலத்திற்கு திருக்கருகாவூர் என்றும் பெயர் வழங்கி வரலாயிற்று. குழந்தை நைந்துருவனுக்கு தாய்ப்பால் இல்லாதபடியால் அம்பாள் காமதேனுவை அனுப்பி பால் கொடுக்கச் செய்தாள். காமதேனு தன் கால் குளம்பினால் கீறவும் பால்குளம் தோன்றியது. அது திருக்கோயிலுக்கு முன்புறம் ஷீரகுண்டம் என்று இன்றும் இருந்து வருகிறது.இத்தலத்து நாயகியை நினைத்து வணங்கினால் கரு உண்டாகிறது. கரு நிலைக்கிறது. சுகப்பிரசவம் ஏற்படுகிறது.